×

நுகர்வோர் அமைப்பு கோரிக்கை வாகனங்கள் நிறுத்த ஷெட் அமைக்கப்படுமா? முத்துப்பேட்டை அருகே நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது

திருத்துறைப்பூண் டி, அக் 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து தூத்துகுடிக்கு 14 டன் நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரி நேற்று அதிகாலை முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு அண்ணாசிலை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் திருவாரூர் வடபாதிமங்கலம் பேரையூரை சேர்ந்த டிரைவர் முருகேசன் (50) திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிளீனர் மாதவன் (45) ஆகியோர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் நெல்மூட்டைகளை பத்திரமாக எடுத்து மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...