அயோத்தியாப்பட்டணம், அக்.18 அயோத்தியாப்பட்டணம் அருகே, மயான நில ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தியாப்பட்டணம் அடுத்த உடையாப்பட்டி அருகே, தாதம்பட்டி காந்தி நகர் பகுதியில் மயானத்திற்கு சொந்தமான இடத்தை அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறிஇ கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால், ஒரு மாதமாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.