சேலம், அக்.18: நவராத்திரி விழா தொடங்கியதையடுத்துஇ சேலத்தில் கோயில், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா, நேற்று தொடங்கியது. படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளை கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்வதே நவராத்திரி வழிபாடாகும். நவராத்திரியின் முதல் 3 நாட்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக்காலம். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலமாகும். நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி, நேற்று சுகவனேஸ்வரர் கோயில், வின்சென்ட் எல்லைபிடாரியம்மன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்,