×

வடமாநில பெண்ணுக்கு சரமாரி கத்தி வெட்டு

பூந்தமல்லி: மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் சொலிமியூச்சு(32). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கொரிய நாட்டு கட்டுமான நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வருகிறார்.  இவர், திருவேற்காட்டில் கோ-ஆபரேட்டிவ் நகரில்  வாடகை வீட்டில் தனியாக  தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சொலிமியூச்சி வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கதவை தட்டி உள்ளனர். சத்தம் கேட்டு சொலிமியூச்சி கதவை திறந்து பார்த்தபோது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கை, கால், பாதம் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். காயமடைந்து விழுந்து கிடந்த சொலிமியூச்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Volleyball knife ,Northland ,
× RELATED நகை மோசடி வடமாநில கும்பல் சிக்கியது