×

கேரளாவிற்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எளாவூர் ஏழுகிணறு பகுதி சோதனை சாவடியில் கவரப்பேட்டை போலீசார்  நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது  ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, காரின் பின்பகுதியில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  பின்னர் காரில் இருந்த 3 பேரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், கேரளா மாநிலத்தை சேர்ந்த சக்திவேல்(26), ஜெயச்சந்திரன்(44) மற்றும் மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(60) எனத்தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களை கைது செய்து 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், விஜயவாடாவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது  தெரியவந்தது. பொன்னேரி: மீஞ்சூர் போலீசார் மீஞ்சூர் 400 அடி சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டபோது பைக்கில் வந்த  மீஞ்சூர் சின்ராசு(23), வழுதிகைமேடு  விக்னேஷ்(23) ஆகியோரை  கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  

Tags : Kerala ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு