×

திமுக மாணவரணி இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், அக்.16: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், அதிமுக அரசை கண்டித்தும், திமுக இளைஞரணி, மாண வரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி ஆகியோர் தலைமை தாங்கினர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடர வேண்டும். சமூக நீதி கொள்கைக்கு எதிராக துணைவேந்தர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிமுக அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். இதில் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் யுவராஜ், பெ.மணி, சோபன்குமார், எழிலரசன், பால்ராஜ், மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், ஒன்றிய இளைஞரணி லட்சுமணன், நகர இளைஞரணி ரவிக்குமார், கமலக்கண்ணன் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,student youth protest ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்