×

எருமப்பட்டி அருகே தலைமறைவு வாலிபர் கைது

சேந்தமங்கலம், அக்.16:எருமப்பட்டியை சேர்ந்த விசவாயி மாணிக்கம் மகன் சிவசுப்ரமணியம்  (29). இவர் மீது கடந்த 2015ம் ஆண்டு நடந்த அடிதடி தகராறில், வழக்குபதிவு  செய்யப்பட்டு, நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.  ஆனால், சிவசுப்ரமணியம் கடந்த சில மாதங்களாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல்,  தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, நீதிபதி அவருக்கு  பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
எருமப்பட்டி போலீசார்  தேடி வந்த நிலையில், நேற்று எஸ்ஐ கதிரேசன் தலைமையிலான போலீசார்,  பொன்னேரி கைகாட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது,  அவ்வழியாக டூவீலரில் வந்த சிவசுப்ரமணியம், போலீசாரை பார்த்ததும் தப்பியோட  முயன்றார். போலீசார் அவரை துரத்திச்சென்று மடக்கி  பிடித்து கைது செய்தனர்.

Tags : Erumappatti ,
× RELATED எருமப்பட்டி அருகே பனைமரங்கள் வெட்டி சாய்ப்பு-போலீசார் விசாரணை