×

மாவட்டத்தில் ஒரே நாளில் பஞ்.செயலர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா

தர்மபுரி, அக்.16:தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் கெரகோடஅள்ளியில், 43வயது அரசு போக்குவரத்து ஊழியர், நல்லம்பள்ளி தண்டுகாரம்பட்டியில் 26வயது ஊராட்சி செயலாளர், காரிமங்கலம் பொம்மஅள்ளியில் 29வயது ஊராட்சி செயலாளர், தர்மபுரி நடுப்பட்டியில் 32வயது போலீஸ் ஏட்டு, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 35வயது ஊழியர், 43வயது ஊழியர், பாப்பிரெட்டிப்பட்டி கோழிமேக்கனூரில் 49வயது டாஸ்மாக் ஊழியர் உள்ளிட்ட 84பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். இதுவரை மாவட்டத்தில் 41பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,panchayat secretaries ,district ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...