முன்விரோத தகராறில் எதிர் வீட்டுக்காரரை கத்தியால் வெட்டியவருக்கு 5 ஆண்டுகள் சிறை சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு

புவனகிரி அக். 2: புவனகிரி அருகே உள்ள வடக்குத்திட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வருபவர் வேல்முருகன் (39). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நடராஜனை கத்தியால் வேல்முருகன் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து நடராஜனின் மனைவி அருள்ஜோதி அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் இந்த வழக்கு விசாரணை சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி நீஷ், கத்தியால் வெட்டிய வேல்முருகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதம்மும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: