×

கடலூர் மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று

கடலூர், அக். 2: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 20,276 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 180 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,276 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 162 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 18,549 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.  இதற்கிடையே, நேற்று 4 பேர் இறந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 1,281 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 219 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 9ஆயிரத்து 649 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் காவல்துறையை சேர்ந்த ஒருவர், கர்ப்பிணி ஒருவர் மற்றும் ஏற்கனவே நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 107 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 2,407 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

Tags : Corona ,district ,Cuddalore ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை