தாய் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

வில்லியனூர், அக். 1: வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை ஒதியம்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலபாஸ்கரன். வீட்டிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் காயத்ரி (22). இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன் காயத்ரியின் தாய் உடல்நிலை குறைவால் தற்கொலை செய்து கொண்டார். தாய் இறந்ததில் இருந்து காயத்ரி மிகுந்த சோகத்துடன் இருந்து வந்தார். தந்தை மற்றும் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் காயத்ரி, நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.

Related Stories: