வேலூர், அக்.1: வேலூர் மாநகராட்சி பகுதியில் 63 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சங்கரன்பாளையத்தில் 22 வயது பெண், சத்துவாச்சாரியில் 30 வயது ஆண், 29 வயது பெண், பழைய காட்பாடி 60 வயது முதியவர், காட்பாடியில் 17 வயது சிறுவன், 3 வயது சிறுவன் வெளிமாநிலங்களை சேர்ந்த 5 பேர் உட்பட 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.