மணப்பாறை அருகே இடி தாக்கி வீடு, 15 டிவிக்கள் சேதம்

மணப்பாறை, அக்.1:  மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. நள்ளிரவு வரை தொடர்ந்த மழையால் மணப்பாறை பஸ் நிலையம், முத்தன் தெரு ஆகிய பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கும், குடியிருப்புவாசிகளுக்கு தேங்கி நின்ற மழை நீர் பெரும்சிரமத்தை அளித்தது. இந்நிலையில் கருமலை அடுத்த அலங்கம்பட்டியில் வசித்து வரும் முருகன் என்பவரது வீட்டின் முகப்பில் விழுந்த இடி கட்டித்தில் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் அப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவிக்கள் சேதமடைந்தது. இதுகுறித்து மருங்காபுரி வட்டார வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: