சிக்கிய நெல்லை வாலிபர் இருவர் சிறையிலடைப்பு

திருச்சி, அக்.1: திருச்சி ஏர்போர்ட் ஆர்.எஸ்.புரம் 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் தவ்பீக்தமிஸ் (43). இவர் சுப்ரமணியபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தமிழ் பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் காஜாமலை காஜாநகரில் உள்ள இவரது உறவினர் ஒருவர் இறந்த நிலையில், கடந்த 19ம் தேதி காரிய நிகழ்ச்சிக்காக மதியம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அங்கு சென்றார். தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 29 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை நடத்தியதில் 5 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்தது. தொடர் விசாரணையை அடுத்து நெல்லையை சேர்ந்த மணிகண்டன் (39), சொம்பல்குமார்(35) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதில் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: