திருவெறும்பூர், அக்.1: திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் அரைவட்ட சாலை பணிக்காக கே.சாத்தனூர், பெரியகுளம், காரைக்குளம், சூரியூர் எலந்தப்பட்டி, பழங்கனாங்குடி, துவாக்குடி, பெரியகுளம், பரந்தான்குளம் ஆகிய குளங்களில் வழியே சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், வல்லுநர் குழு, தேசிய சுற்றுச்சூழல் குழுக்களின் வழிகாட்டலுக்கு எதிரானது. இதற்கு காரணமான நெடுஞ்சாலை காரைக்குடி திட்ட இயக்குனர், திருச்சி கலெக்டர், மண்டல தலைமை பொறியாளர், காவிரி வடிகால் கோட்ட பொறியாளர், மாயனூர் நிலக்கோட்ட செயற்பொறியாளர் ஆகியோரை கண்டித்தும், உயர்நீதிமன்ற மதுரை கிளை தூர்க்கப்பட்ட ஏரி, குளங்களை காப்பாற்றி உதவிட வலியுறுத்தியும், தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில், சமூக ஆர்வலர் சம்சுதீன் ஆகியோர் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் பரந்தான் குளம் பகுதியில் சாகும் வரை தண்ணீர் அருந்தா உண்ணாவிரத போராட்டத்தை நேற்று காலை துவக்கினர்.