முசிறி, அக்.1: முசிறி அருகே சாலையோரத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 17 பேர் காயமடைந்தனர். மின்மாற்றி அருகே வேன் கவிழ்ந்த நிலையில் அதிஷ்ட வசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. திருச்செங்கோட்டையை சேர்ந்த பாலசந்திரன்(52) என்பவர், உறவினர்களுடன், ரங்கம் மேலூரை சேர்ந்த உறவினர் சக்திவேல் என்பவரின் தாய் இறந்த துக்க நிகழ்விற்காக வேனில் புறப்பட்டு வந்துள்ளனர். வரும்வழியில் நாமக்கலில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த நிலையில் வேன் முசிறியை கடந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஏவூர் கருப்பு கோயில் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த கவுசல்யா(40), கண்ணகி(45), கனகராஜ்(50), செல்வம்(54), பாலசந்திரன்(52), வசந்தி(50), நாமக்கலை சேர்ந்த சேர்ந்த துளசிமணி(40), இளஞ்செழியன்(45), யாழினி(16), ஜீவிதா(10), ஜனனி(5), யோகராஜன்(35), நாகம்மாள்(65) ஆகியோர் காயமடைந்தனர்.