×

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 1: தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி கொக்கேரி பகுதி விவசாயிகள் இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி கும்பகோணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமென உறுதியளித்ததன் அடிப்படையில் கொக்கேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் கடந்த 10 நாட்களாக 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து கொள்முதலுக்காக காத்து கிடக்கின்றனர்.

தற்போது இங்கு கொள் முதல் நிலையம் திறக்கப்படாது என தெரியவந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொக்கேரியில் திறக்ககோரி நெல் கொள்முதல் நிலையம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் குருமூர்த்தி, நகர செயலாளர் ராஜாராமன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,opening ,paddy procurement center ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு