×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் வாபஸ்

திருக்காட்டுப்பள்ளி, அக். 1: திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலையில் இருந்து வியாகுலமாதா கோயில் வரை தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், காவிரி புதுப்பாலம் அருகில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் திருக்காட்டுப்பள்ளி பொதுப்பணித்துறை அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பழமார்நேரி கிளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை போராட்டக்காரர்கள் பழமார்நேரி கிளை செயலாளர் ஜெஸ்டின், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவகுமார், ஒன்றிய செயலாளர் காந்தி, லூர்துசேவியர், சிவசாமி, முருகேசன் உள்ளிட்டோருடன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அரவிந்தன், திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றதாக கூறி சென்றனர்.

Tags : protest ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...