×

வியாபாரிடம் ரூ.35 ஆயிரம் திருட்டு

நாகை,அக்.1: நாகை கடைத்தெருவை சேர்ந்தவர் சண்முகம்(61). இவர் நாகை கடைத் தெருவில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 28ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க சண்முகம் வந்தார். அப்போது பூட்டில் மெழுகு வைத்து அடைத்திருந்தது. உடனே அவர் ரூ.35 ஆயிரம் வைத்திருந்த பையை அருகில் வைத்து விட்டு பூட்டில் அடைத்திருந்த மெழுகை எடுத்துவிட்டு திரும்பி பார்த்த போது பையை காணவில்லை, இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் நாகை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதனமுறையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Theft ,trader ,
× RELATED லாரி மோதியதில் வியாபாரி பலி