×

மூட்டை மூட்டையாக புகையிலை கொட்டி அழிப்பு

மயிலாடுதுறை.அக்.1: மயிலாடுதுறை அருகே திருவாலங்காடு சோதனை சாவடியில் மணல்மேடு காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் குத்தாலம் போலீசார் கடந்த மே மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு லாரியில் புகையிலை பொருளான 60 மூட்டைகளில் 1,80,000 ஹான்ஸ் பாக்கெட்கள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவர் மதுரை மேலூரை சேர்ந்த பூரணஜோதி (32) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் குத்தாலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புகையிலை துர்நாற்றம் வீசியது. இது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது, கைப்பற்றப்பட்ட ஹான்ஸ் புகையிலையை அரசுஅதிகாரிகள் முன்னிலையில் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் குத்தாலம் பேரூராட்சி கம்போஸ்ட் குப்பை கிடங்கில் குழிக்குள் கொட்டி அழிக்கப்பட்டது.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...