×

பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்து மது விற்ற 4 பேர் கைது

தோகைமலை, அக்.1: தோகைமலை பகுதியில் பெட்டிக்கடைகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி கார்ணாம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வடிவேல் (42). இவர் பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இதேபோல் கல்லடை கைகாட்டியில் ரங்கராஜ் (51), சின்னதேவன்பட்டியில் வேலுச்சாமி (50), ஊமைஉடையானூரில் முருகேசன் (51) ஆகியோரும் தங்களது பெட்டிக்கடைகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் பெட்டிக்கடைகளில் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா