×

டிஎன்பிஎல் ஆலை வளாகத்தில் 5 கிலோ காப்பர் நட்டு திருடியவர் கைது

கரூர், அக். 1: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள டிஎன்பிஎல் ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடையுள்ள காப்பர் நட்டுக்கள் திருட்டு போனதாக உதவி மேலாளர் செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரூ. 2500 மதிப்புள்ள காப்பர் நட்டுக்களை திருடியதாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : DNPL ,
× RELATED டிஎன்பிஎல் கிரிக் கெட்கோவை அபார வெற்றி