பொள்ளாச்சி, அக். 1: பொள்ளாச்சி கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக புதுபித்தல் பிரிவு பணிமனை முன்பு நேற்று பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை 2ன் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொ.மு.ச. கிளை செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் பரமசிவம், தொ.மு.ச. மண்டல துணை செயலாளர் செந்தில்குமார், ஏ.ஐ.டி.யு.சி. மண்டல ெபாறுப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு பஸ்களை தனியார் மயமாக்கும் முயற்சியை, மாநில அரசு கைவிட வேண்டும். 14வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் பேசி முடிக்க வேண்டும். அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் பயணிகளை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.