×

வாகன சோதனையில் பணம் வசூல் அறச்சலூர் எஸ்.ஐ. மீது பா.ஜ.வினர் புகார்


ஈரோடு, அக்.1:  ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் அக்கட்சியினர் நேற்று எஸ்.பி.தங்கதுரையிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அறச்சலூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. குமாரவேல், அறச்சலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்களின் டூ-வீலர், நான்கு சக்கர வாகனங்கள், விவசாய வேளாண்  விளை பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் உட்பட அனைத்தையும் சோதனை என்ற பெயரில் வழிமறித்து, விதிமீறல் காரணம் காட்டி சட்டத்துக்கு புறம்பாக பணம் வசூல் செய்து வருகிறார்.

சட்டப்படியான அபராதம் செலுத்த தயார் என வாகன ஓட்டிகள் கூறினாலும், சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்ச அபராத தொகையை விதிப்பேன் என மிரட்டுகிறார். அபராதம் விதித்தால் பெருந்தொகை வரும். எனக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் போதும் என அடாவடி வசூலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எஸ்.ஐ.யின் கெடுபிடியால் வியாபாரிகள் வாழைத்தார் வெட்ட அறச்சலுார் பகுதிக்கு வர மறுக்கின்றனர். எனவே, உரிய விசாரணை நடத்தி எஸ்.ஐ. மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Arachalur SI ,BJP ,
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...