×

வேளாண் மசோதாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக்.1: மத்திய அரசின் வேளாண் மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு திண்டலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான குமாரசாமி தலைமை தாங்கினார். இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மணிராசு, பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் தலைவருமான வில்லரசம்பட்டி முருகேசன், செக்கிங் இன்ஸ்பெக்டர் சங்கத்தலைவர் தமிழ்ச்செல்வன், வார்டு செயலாளர்கள் சரவணன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,agriculture bill Demonstration ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்