×

பா.ஜ. நிர்வாகியை அடித்து உதைத்த வாலிபர் கைது

ஈரோடு, அக்.1: ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன்நகர் 4வது வீதியை சேர்ந்தவர் மணி மகன் வசந்தகுமார் (30). சிசிடிவி கேமரா பொருத்தும் வேலை செய்து வருகிறார். பா.ஜ. நிர்வாகி. கடந்த 28ம் தேதி வைராபாளையம் நால் ரோடு அருகே வசந்தகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பழக்கமான ஜெயகோபால் வீதியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக்கான குணா (32) என்பவர் வந்து, பா.ஜ.வில் சேர்ந்து பெரிய ஆளாக மாறிவிட்டாய் என பேசி உள்ளார். அதற்கு வசந்தகுமார், குணாவை பேசாமல் போய் விடு என கூறி வீட்டிற்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த குணா, வசந்தகுமார் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி உதைத்துள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து குணாவை விலக்கிவிட்டனர். அப்போது குணா, வசந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இதுகுறித்து வசந்தகுமார் அளித்த புகாரின்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குணாவை நேற்று கைது செய்தனர்.

Tags : BJP ,administrator ,
× RELATED பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை...