ஓமலூரில் விசிக ஆர்ப்பாட்டம்

ஓமலூர், அக். 1: ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சி பாசறை சார்பில், காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை  சிறுத்தைகள் கட்சியினர் மீது 110 பிரிவில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறை  அதிகாரிகள் அடக்கு முறையை கையாள்வதை கண்டித்தும், பொறியியல் பட்டதாரி விஷ்ணுபிரியன் கொலை வழக்கில், சரியான நடவடிக்கை  எடுக்காத டிஎஸ்பி பாஸ்கரனை கண்டித்தும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க  வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட அமைப்பாளர் சாமுராய், மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர்  தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள்  பாவேந்தன், மெய்யழகன், மணிகுமார், சிவா, அர்ச்சுனன், மாதேஸ்வரி உள்பட  500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: