அயோத்தியாபட்டணம், அக்.1: அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் பகுதியில் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஆணையாளரை கண்டித்து நேற்று உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்தது. அப்போது திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் மேற்கொள்ளும் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், அன்புராஜ் ஆகியோர், ஆளும்கட்சியினர் செயல்படுத்தும் திட்டங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். இதனால் தங்கள் பகுதிகளில் திட்டப்பணிகளை செயல்படுத்த முடியவில்லை என்றனர். ஆனால், அவர்களது கேள்விக்கு ஒன்றிய ஆணையாளர் குமரேசன் பதில் அளிக்கவில்லை.