×

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா மேலும் 2 பேர் பலி

தர்மபுரி, அக்.1: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் 25 வயது தூய்மை பணியாளர், பொம்மிடியில் 15 வயது சிறுமி, 70 வயது  முதியவர், 14 வயது மாணவர், 62 வயது மூதாட்டி, தாளநத்தம் பகுதியில் 29 வயது போலீஸ் ஏட்டு, மெணசியில் 50, 29, 18 வயது பெண்கள், அரூர் கீழனூரில் 30 வயது தூய்மை பணியாளர், பாலக்கோடு சிகரலஅள்ளியில் 20 வயது மாணவர், தர்மபுரி குப்பூரில் 32 வயது பெண், பில்பருத்தியில் 23 வயது இளைஞர், பாளையம்புதூரில் 45 வயது கூலி தொழிலாளி, நல்லம்பள்ளியில் 48 வயது கூலி தொழிலாளி உள்ளிட்ட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.நேற்று ஒரே நாளில் மொத்தம் 3,818 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 2877 பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பினர். 915 பேர் அரசு மருத்துவமனை, வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 63 பேர் குணமாகினர். மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வியாபாரி, முதியவர் பலி :பாலக்கோடு வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த 54 வயது வியாபாரி நீரிழிவு, ரத்தகொதிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 25ம் தேதி சளி, காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தர்மபுரி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல், கடகத்தூரில் 85 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் நெஞ்சுவலி ஏற்பட்டு அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் நேற்று அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Dharmapuri district ,Corona ,
× RELATED கள்ளத்துப்பாக்கியை ஒப்படைக்காவிட்டால் குண்டாஸ்