×

இலவச வீடு வழங்கியதில் முறைகேடு முக்குளம் கிராமத்தில் அதிகாரி விசாரணை.

காரிமங்கலம், அக்.1: காரிமங்கலம் ஒன்றியம், முக்குளம் ஊராட்சியில் பிரதம மந்திரியின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இறந்தவர்களுக்கும் கூட வீடு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து, மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து முக்குளம் ஊராட்சிக்கு சென்று, இலவச வீடு ஒதுக்கீடு தொடர்பாகவும், அதை பெற்ற பயனாளிகள் குறித்தும் நேரடி விசாரணை மேற்கொண்டார். அப்போது பிடிஓக்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : investigation ,village ,house ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...