கெங்கவல்லி, செப்.30: கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் பிரியா தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயேந்திரன், ஒன்றிய ஆணையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 28 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்தது. துணைத் தலைவர் விஜயேந்திரன் பேசுகையில், ‘ஒன்றிய கூட்டத்தில் கிராம ஊராட்சி ஆணையாளர் கலந்துகொள்வதில்லை. அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது கவுன்சிலர்களை ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவு செய்கிறார். கவுன்சிலர்கள் கொடுக்கும் பணியை கிடப்பில் போட்டு விடுகிறார். எனவே, ஆணையாளர் கூட்டத்துக்கு எப்போது வருகிறாரோ, அப்போது தான் நான் தீர்மானத்தில் கையெழுத்திடுவேன்,’ என கூறினார்.