×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.30:பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியிலிருந்து தென்கரைக்கோட்டை வரை, சாலையோரங்களில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பத்மாவதி தலைமையில், வெங்கட்ராமன், அரூர் டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Tags : Removal ,Papirettipatti ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...