×

மழையால் சாய்ந்த மின்கம்பம்: உயிர் பயத்தில் பொதுமக்கள்

பரமக்குடி, செப்.30:   பரமக்குடி அருகே பார்த்திபனூர் மேற்குப் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்து, விழும் தருவாயில் இருந்ததால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து  இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் மின் கம்பம் சாய்ந்து அருகிலுள்ள வீடுகளில் மின்சார கம்பிகள் விழுந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரும் போது மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் விளையாடும் போது மின்கம்பம் சாய்ந்து உயிர்பலி வாங்கி விடுமோ என்ற நிலையில் அப்பகுதி மக்கள் பீதியுடன்  குடியிருந்து வருகின்றனர். வீடுகளில் விழுந்துள்ள மின் கம்பிகளால் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு  ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, இளைஞர்கள் கம்புகளால் தற்காலிக மின்கம்பம் செய்து மின் கம்பிகளை அதில் விட்டுள்ளனர். இதுகுறித்து, பார்த்திபனூர் மின்சார வாரிய உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

Tags : Public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...