×

போதையில் கோர்ட்டில் ஆஜரானவர் மீது வழக்கு

கோவை, செப்.30: ேகாவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர் கோவை நகர போலீசில் சிறார் பாலியல் பலாத்கார வழக்கு (போக்சோ) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களாக இவர் ஜாமீனில் இருக்கிறார். நேற்று காலை இவர், இந்த வழக்கின் விசாரணைக்காக கோவை மகிளா கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் மது போதையில் தள்ளாட்டத்துடன் காணப்பட்டார். இவரின் செயல்பாட்டை பார்த்து அதிருப்தியடைந்த நீதிபதி ராதிகா, போலீஸ் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : court ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...