குயிலை சுட்டவருக்கு ரூ.5ஆயிரம் அபராதம்

மேட்டுப்பாளையம், செப்.30: கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ஜார்ஜ் ஜோசப் (50) என்பவர் மேட்டுப்பாளையம் மாதையன் லேஅவுட்டில்  அவரது தாயார் வீட்டுக்கு வார இறுதியில் அவரது வழக்கம். அவ்வாறு வார விடுமுறையில் கடந்த சனிக்கிழமை தாயாரைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் இருந்த மாமரத்தில் குயில் கத்துவது கேட்டு எரிச்சலடைந்து தன்னிடமிருந்த துப்பாக்கி மூலம் குயிலை சுட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் சுரேஷ், வனக்காப்பாளர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஜார்ஜ் ஜோசப்பிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: