வேலூர், செப்.29: வேலூர் மாவட்டத்தில் நேற்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 161 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகங்களில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடப்பது வழக்கம். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் அளிப்பது வழக்கம். இதன்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் இந்த குறைதீர்வு கூட்டம் கடந்த மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. தொடர் பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற இயலவில்லை.