×

தக்கலையில் அதிகாரி வீட்டை வாடகைக்கு எடுத்து மகள்களை விபசாரத்தில் தள்ளிய கொடூர தாய் கைது

தக்கலை, செப்.29: தக்கலை மேட்டுக்கடையில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில், மாவட்ட முன்னாள் சுகாதார பணிகள் துறை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறைக்கு புகாருக்கு மேல் புகார் சென்றது. அதன்படி நேற்று முன்தினம் காலை ரகசிய போலீசார் அந்த பகுதி முழுவதும் நோட்டமிட்டனர். இதை தெரிந்து கொண்ட புரோக்கர்கள்  பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 2 ஆண்கள், 4 மாணவிகள், ஒரு ெபண் ஆகியோர் அரை குறை ஆடைகளுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இதில் தக்கலை மேட்டுக்கடையை சேர்ந்த 36 வயது பெண், தனது மகள்கள் 3 பேர், உறவினர் ஒருவரது மகள் ஆகியோரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

மாணவிகள் 10, 12, கல்லூரி முதலாம் ஆண்டு படித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகளை போலீசார் மீட்டனர். பின்னர் மகளிர் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவிகளின் தாயார் மற்றும் குளச்சல் அண்ணாசிலை அருகில் உள்ள ராஜ்மோகன் (47), குழித்தறை பெருந்துறையை சேர்ந்த சுனில்குமார் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். புரோக்கர்களாக செயல்பட்ட காங்கிரஸ் பிரமுகர் சேம் செல்வகுமார், பாபு ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். ராஜ்மோகனின் மனைவி நெல்லை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தக்கலை டிஎஸ்பி அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து வெகு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : officer ,house ,daughters ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...