பொள்ளாச்சியில் மாயமான விவசாயி பி.ஏ.பி வாய்க்காலில் பிணமாக மீட்பு

காங்கயம்,செப்.29:பொள்ளாச்சி மலையாண்டிபட்டினம் பகுதியில் வசித்து வந்தவர் மயில்சாமி(83) விவசாயி. இவரை நேற்று முன்தினம் காலை 7.30 மணியிலிருந்து காணவில்லை என இவரது மகன் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று மதியம்  காங்கேயம் பழையகோட்டை ரோடு வழியாக செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றினர். பிரேத விசாரணைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பொள்ளாச்சி அருகே மாயமான விவசாயி மயில்சாமி என தெரியவந்தது. தொடர்பாக காங்கயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: