×

இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்

கோவை, செப். 29:  இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட பேண்ட் வாத்திய இசைக்கலைஞர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் பல ஆண்டுகளாக திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அனைத்து மத சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேண்ட் இசைக்கருவிகளை வாசித்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் எங்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இத்தொழிலை நம்பி இருக்கும் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் எங்களது குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் தகுந்த பாதுகாப்புடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி