×

கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை

கோவை, செப். 29: கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் இதுவரை அரசு கல்லூரியில் விண்ணப்பிக்காத நபர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம்,  வரலாறு, பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதவியல் உள்பட 24 பாடங்கள் உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் மொத்தம் 1,433 இடங்கள் உள்ளது. இதனுடன் உயர்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி, கூடுதலாக 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இறுதிகட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், மொத்தம் 69 இடங்கள் நிரப்பப்பட்டது. இதன் மூலம் அரசு கலைக்கல்லூரியில் இருந்த 1,375 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மீதமுள்ள 150 இடங்களுக்கான இறுதிகட்ட மாணவர் சேர்க்கை இன்று நடக்கிறது. இதில், இதுவரை கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் பங்கேற்கலாம் என கல்லூரியின் முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Tags : Coimbatore ,Government Arts College ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்