ஏத்தாப்பூரில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் சிறுவன் கைது

சேலம், செப்.29: சேலம் ஏத்தாப்பூரில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகேயுள்ள தும்பல் பகுதியில் 7 வயது சிறுமி, நேற்று முன்தினம் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுவன், அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு அருகேயுள்ள குடிசைக்கு சென்றுள்ளான். அங்கு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதனை பார்த்த அப்பகுதியினர், சிறுவனை பிடித்து கண்டித்தனர். பின்னர், இதுபற்றி வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி விசாரணை நடத்தி, 15 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து நேற்று சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: