பேரூர் செயலாளர் தலைமையில் ஜலகண்டாபுரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஜலகண்டாபுரம், செப்.29: மத்தியஅரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்டம்  நங்கவள்ளி ஒன்றியம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில், பேரூர் திமுக செயலாளர் தமிழ்தென்றல் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தலைமை செயற்குழு  உறுப்பினர் காசி, துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்ரமணி,  தர்மலிங்கம் மற்றும் காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணமூர்த்தி,  ராஜேந்திரன், அசோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்  செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வெங்கடேஷ், ராஜாத்தி, நிருபன்  குமார், மதிமுக மாரியப்பன், செல்வகுமார் மற்றும் ரவிச்சந்திரன்,  சுரேஷ், தங்கராஜ், மேகநாதன் உள்படபலர் கலந்துகொண்டு, மத்திய அரசின் விவசாயிகள் விரோத மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ...

Related Stories: