×

பிளஸ்2 மாணவி கடத்தல்

கெங்கவல்லி,  செப்.29: கெங்கவல்லி பேரூராட்சி பகுதியில் வசிப்பவரின் 17 வயது மகள்,  அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். கடந்த 24ம் தேதி கடைக்கு சென்ற  மாணவி, மீ்ணடும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை  கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொ) முருகனிடம் புகார் தெரிவித்தார். அதில்  அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் மகன் ராஜ்குமார்(25)  என்பவர், மகளை கடத்தி சென்றுவிட்டார் என தெரிவித்திருந்தார். எஸ்ஐ  முருகேசன் வழக்குபதிவு செய்து, ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும்  நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை