×

நகை மதிப்பீட்டாளர் சங்க கூட்டம்

சிவகங்கை, செப்.29:  சிவகங்கையில் மாவட்ட நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத் தலைவராக வீரையா, செயலாளராக ரெங்கநாயகி, மாவட்ட பொருளாளராக நிவேதிதா, மாவட்ட துணைத்தலைவராக கவிதா, துணைச் செயலாளராக சீதாலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு வங்கிகள் சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைவருக்கும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Meeting ,Jewelry Appraisers Association ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...