×

கமுதியில் சந்தனகூடு திருவிழா

கமுதி, செப்.29: கமுதி பெரிய தர்ஹா சந்தனக்கூடு திருவிழா, ஊர்வலம் இல்லாமல் ஆரவாரமின்றி நடைபெற்றது. கமுதியில் பெரிய தர்ஹா என கூறப்படும் முசாபர் அவுலியா தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். வாணவேடிக்கை, மேளதாளங்கள் மற்றும் கச்சேரி ஆகியவற்றுடன் சந்தனக்கூடு நகர்வலம் வந்து பெரிய தர்ஹாவை வந்தடையும். இதில் முஸ்லீம் மக்கள் மட்டுமல்லாமல் இந்துக்களும் கலந்து கொள்வர். பல வருடங்களாக நடந்து வரும் இந்த சந்தனக்கூடு திருவிழா, கொரோனா காரணத்தால், இந்த வருடம் சமூக இடைவெளியுடன் குறைந்த நபர்களை கலந்து கொண்டனர். தர்ஹா டிரஸ்ட் தலைவர் அப்துல்வஹாப் சகாராணி வீட்டிலிருந்து சந்தன குடத்தைவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லாமல், காரில் வைத்து தர்ஹாவிற்கு கொண்டு வந்தனர். பிறகு சம்பிரதாயங்கள் முறைப்படி இத்திருவிழாவை நடத்தி முடித்தனர்.

Tags : Sandalwood Festival ,Kamuthi ,
× RELATED முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது