மதுரை, செப். 29: கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு விஸ்வகர்மா சமூக மக்களை நியமிக்க வேண்டும் என பாபுஜி சுவாமி, கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் இணைந்து, மதுரை பாண்டியன் ஓட்டலில் கருத்தாய்வு ஆலோசனை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் கூட்டத்தை நடத்தின. நிலவேம்பு சித்தர் ல பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்றார். கூட்டத்தில், ‘‘கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு விஸ்வகர்மா சமூக மக்களை நியமிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு விஸ்வகர்மா சமூகம் சார்ந்த 5 பேருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்.