வேலூர், செப்.26: வேலூர் மாநகராட்சியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பிடிஓ அலுவலக ஊழியர் உட்பட 82 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,173 பேராக இருந்தது. வேலூர் மாநகராட்சியில் மட்டும் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று 157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 82 பேர் அடங்குவர்.