×

(வேலூர்) மனைவியை அனுப்புமாறு கூறிய மருமகனுக்கு சரமாரி கத்திவெட்டு: மாமனார் கைது

வேலூர், செப்.26:மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறிய மருமகனை கத்தியால் சரமாரி வெட்டிய மாமனாரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(38), டிரைவர். இவரது மனைவி தரணி(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தரணி, மகன்களை அழைத்துக் கொண்டு அதே கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசன், குடித்துவிட்டு மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்தாராம். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாமனார் கிருஷ்ணன், மாமியார் முனியம்மா ஆகியோர் மருமகனை கத்தியால் சரமாரி வெட்டினார்களாம். இதில் படுகாயமடைந்த வெங்கடேசன், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணன் மற்றும் முனியம்மா ஆகியோரை கைது செய்தனர்.

Tags : son-in-law ,Vellore ,Father-in-law ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...