புதுச்சேரி, செப். 26: புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சாமி சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்றதாக சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை கடந்த 2016ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவரது வீடுகள் மற்றும் குடோன்களில் பழங்கால கற்சிலைகள், ஐம்பொன் சிலைகள், யானை தந்தத்தால் ஆன பொருட்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக்கூடம் நடத்தும் புஷ்பராஜனை கைது செய்தனர். இவரது தகவலின்பேரில், புதுச்சேரி உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ரூ.50 கோடி மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் மரியதெரசா வனினா ஆனந்தி (39) என்பவரை கைது செய்தனர்.