கோவை, செப். 26: தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை முத்தண்ணன் குளத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குளத்தில் இருந்து வழிந்தோடும் உபரிநீர், ராஜவாய்க்கல் வழியாக உக்கடம் பெரியகுளம் செல்கிறது.
இந்நிலையில் பொன்னையராஜபுரம் அருகே உள்ள பழனிசாமி காலனி பகுதியில் ராஜவாய்க்கால் நீர்செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நேற்று நள்ளிரவு வெள்ளம் புகுந்தது.